டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணி தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு!

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணி தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  குரூப் 5 (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி) பதவியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு (விரிந்துரைக்கும் வகை) வருகிற 18ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.‘

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வு எழுதுபவர்கள், அவர்களுக்கு உரிய ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.