உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக,  அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை பாயும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.