நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஈபிஎஸ் கடும் விமர்சனம்..!!

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நாளை 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ” உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டுள்ளது.இவர் வந்தால் நடைபெற்று வரும் ஊழலுக்கு எல்லாம் தலைமையாக இருந்து செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.ஏனென்றால் நாடு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காத ஒரு ஆட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.ஸ்டாலின், அவரது மனைவி, அவருடைய மருமகன் அவருடைய மகன். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா?” என விமர்சித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.