அமைச்சராக உதயநிதி.. இன்று என்னென்ன திட்டம்? வெளியான தகவல்!

அமைச்சராக இன்று பதவியேற்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை 8.45 மணிக்கு ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெறும் உதயநிதி ஸ்டாலின் காலை 9.00 மணி ஆளுநர் மாளிகை செல்கிறார்.

9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் அமைச்சராகப் பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும் காலை 10.00 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.

அதைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். உதயநிதிக்காக பிரத்யேக அறை தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக அதன் பணிகள் நடைபெற்றன.

அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு பெரியார் திடல் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

11.00 மணிக்கு பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

காலை 11. 30 மணிக்கு கோபாலபுரம் சென்று கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்துகிறார். பாட்டி தயாளு அம்மாளிடம் ஆசி பெறுகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு சி.ஐ.டி காலனி சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெறுகிறார். அங்கும் கலைஞர் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.