விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்!!

விஜய் டிவியில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குநர் தாய் செல்வம் காலமானார்.

கடந்த 2009ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3ஆம் விதி’ படத்தை இயக்கியவர் இவர்தான். மேலும் பல்வேறு சின்னத்திரை சீரியல்களையும் இயக்கி பிரபலமடைந்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், ‘மௌனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, காத்து கருத்து, பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, தாயுமானவன் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர், ‘ஈரமான ரோஜாவே 2’ என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவரது இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைகாட்சி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்” எனப் பதிவிட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.