45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு..!

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக சியாமளா தேவி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாக மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 45 ஐபிஎஸ் அதிகாரிகளில் 27 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.