Nothing Phone நிறுவன தலைவர் அவர்களின் 2023 ஆண்டு கணிப்பு! இவர் என்ன ஜோசியரா?

Nothing நிறுவனத்தின் தலைவர் கார்ல் பெய் எப்போது எதிர்காலத்தை யோசித்து கூறுபவர். Oneplus போன்ற Flagship Killer என்று அழைக்கப்படும் நிறுவனத்தை உருவாக்குவதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த நிறுவனம் அதுவரை சந்தையில் அதிகம் செலுத்திவந்த Samsung, Apple போன்ற நிறுவனங்களுக்கு மாற்று நிறுவனமாக உருவெடுத்ததற்கு இவர் ஒரு மிகப்பெரிய காரணம்.

இவர் இப்போது 2023 ஆம் ஆண்டு டெக்னாஜி உலகில் எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார். இதில் அவர் பல நாட்டு அரசுகள், AI கில்லர் ஆப், ஹைபிரிட் வேலை, ஆப்பிள், டெஸ்லா, எலன் மஸ்க் போன்றவர்களின் நடவடிக்கைகளையும் கணித்துள்ளார்.

​1.புதிய AI Killer ஆப்நாம் பெரும்பாலும் நமது தேடல்களுக்கு Google நிறுவனத்தையே சார்ந்திருக்கும் நிலையில் புதிதாக AI ஆப் ஒன்று இந்த ஆண்டு உருவெடுக்கும் என்று அவர் கணித்துள்ளார். இதன் மூலம் நாம் பல தேடல்களை சுலபமாக மேற்கொள்ளமுடியும். ஆனால் இதுபோன்ற செயலி இன்னும் வரவில்லை.
​2.Tesla சரிவுதற்போது எலக்ட்ரிக் கார் உலகில் நம்பர் 1 நிறுவனமாக இருக்கக்கூடிய டெஸ்லா நிறுவனம் மற்ற பரம்பரை கார் நிறுவனங்களை ஓரம்கட்டி தலைசிறந்த நிறுவனமாக இருந்துவருகிறது. ஆனால் இந்த ஆண்டு அது மாறும் என்று அவர் கணித்துள்ளார்.
மற்ற கார் நிறுவனங்கள் எல்லாம் தற்போது மேம்பாட்டு புதிய கார்களை அறிமுகம் செய்துவருவதால் இந்த ஆண்டு Tesla நிறுவனம் இன்னொரு சராசரி கார் நிறுவனமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
​3.Twitter நன்றாக இருக்கும்பெரும் பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி தற்போது அதிலேயே அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறார். இதன் காரணமாக ட்விட்டர் பல்வேறு விதங்களில் மேம்பட்டு இன்னும் சிறப்பாக செயல்படும் என்று கணித்துள்ளார்.
​4.MetaVerse அவ்ளோதான்ல்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து Meta நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி அதனால் பலரது வேலை இழக்க காரணமாக இருந்த Metaverse இந்த ஆண்டும் முந்தய ஆண்டை போலவே மக்கள் அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் என்று கூறியுள்ளார்.
​5.Meta நிறுவனத்திற்கு புதிய திருப்பம்Metaverse மூலம் நஷ்டம் அடைந்தாலும் அதன் தலைவர் மார்க் சகேர்பேர்க் முயற்சியால் Meta நிறுவனம் மீளும் என்று கணித்துள்ளார். மேலும் தன்னால் ஆன நஷ்டதை எப்படியாவது ஈடுகட்டுவார் மார்க் சகேர்பேர்க் என்று கணித்துள்ளார்.
​6.Apple பங்குகள் உயர்வுஅதிக தரம் வாய்ந்த பொருட்கள் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மேலும் உயரும். இதனால் முன்பு போலவே உலகின் மிகவும் அதிக மதிப்புள்ள நிறுவனமாக Apple நிறுவனம் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
​7.Smartphone ஆதிக்கம்தொழில்நுட்பம் மேம்பாடு காரணமாக தொடர்ந்து உலகில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களை மேம்படுத்த புதிய சேவை வசதிகள் மற்றும் மென்பொருள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
​8.Apple நிறுவனம் மீது அரசுகள் கோவம்பயனர்களுக்கு தொடர்ந்து எதிராக திட்டங்களை வகுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது உலக நாடுகள் பல கடும் கோவத்தில் இருக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் மீது தீவிர நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
​9.அதிக லாபம் ஈட்ட அதிக வேலைநிறுவனங்கள் மீண்டும் அதிக லாபம் ஈட்ட அதிகப்படியான வேலை செய்யவேண்டும் என்றும் அது இந்த ஆண்டு இன்னும் தீவிரமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
​10. ஹைபிரிட் வேலை மறையும்கொஞ்சம் கொஞ்சமாக ஹைபிரிட் வேலை மறையும் என்றும் நிறுவனங்கள் ஒன்று முழு அலுவலக வேலை அல்லது முழு வீட்டில் இருந்தே வேலை என்ற நிலைக்கு வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.