2023ல் உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும்: IMF தலைவர் எச்சரிக்கை!

“மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும்,” என, சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உட்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும்,” என, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கிறிஸ்டலினா அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சி அடுத்தடுத்து குறைந்து உள்ளதால் கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு கடினமாக இருக்கும். உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மந்தநிலையை சந்திக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பொருளாதார மந்த நிலையில் இல்லாத நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக உணர்வார்கள். 40 ஆண்டுகளில் முதல் முறையாக, 2022 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி உலக வளர்ச்சி விகிதத்தை விட குறைவாகவோ அல்லது அந்த அளவிலோ இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையின் ஒளி நம் முன்னால் உள்ளது; சீன அதிபரின் புத்தாண்டு மெசேஜ்.!

சர்வதேச நாணய நிதியத்தில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதே இந்த அமைப்பின் நோக்கம். பொருளாதார பிரச்னைகள் எழுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது.

மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.