தம்பியை அறிவாளால் வெட்டிய அண்ணன்.! தேனி அருகே பரபரப்பு.!

தேனி மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையில் தம்பியை அறிவாளால் அண்ணன் வெட்டிய சம்பவம் அவ்வகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் காமயக்கவுண்டம்பட்டி கருமாரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (28). இவருடைய தம்பி ஈஸ்வரன் (27). இந்நிலையில் இவர்களிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஈஸ்வரனுக்கும், ஜெயபிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெயப்பிரகாஷ் மறைத்து வைத்திருந்த அறிவாளால் தம்பி ஈஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தம்பியை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன் ஜெயபிரகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.