எப்படி இருக்கு வீர சிம்ஹா ரெட்டி படம், ட்விட்டர் சொல்லும் விமர்சனம்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில், டிவிட்டரில் படம் குறித்து விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

படத்தின் கதை:
ஜெயசிம்ஹா ரெட்டி தனது தாயார் மீனாட்சியுடன் இஸ்தான்புல்லில் வசித்து வருகிறார். அவர் ஈஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ராயலசீமாவில் வசிக்கும் புலிச்சார்லாவை ஆளும் ஜெயாவின் தந்தை வீர சிம்ம ரெட்டியின் அடையாளத்தை மீனாட்சி வெளிப்படுத்துகிறார். பானுமதியும் பிரதாப் ரெட்டியும் கடந்த 30 ஆண்டுகளாக வீர சிம்ம ரெட்டியைக் கொல்ல முயர்ச்சிக்கின்றார்கள். வீராவை ஏன் கொல்ல நினைக்கிறார்கள்? பானுமதி யார்? வீர சிம்ம ரெட்டி தனது மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்தது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் படத்தில் பதில் கிடைக்கும்.

ட்விட்டர் ரியாக்சன்:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.