திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும் – அடித்து சொல்லும் மாஜி..!

வருகின்ற 2026 தேர்தலில் ஒரு சாதாரண தலித் திமுக தொண்டனை ஸ்டாலின் திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைதேர்த்லில் அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடவுள்ளனர். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், திமுக தேர்தல் நிலைப்பாட்டை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக அதிமுக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார்.

ஒரு சாதாரண எளிய தலித் திமுக தொண்டனை வருகின்ற 2026 தேர்தல் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை கழக செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை என்று விமர்சித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி கருணாகரன் உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.