மனநலம் பாதிக்கப்பட்டவர் துப்பாக்கிச்சூடு; ஒடிசா அமைச்சர் மரணம்.!

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

ஒடிசா சுகாதார அமைச்சரும் மூத்த பிஜேடி தலைவருமான நபா தாஸ் பிரஜராஜ்நகரின் காந்தி சக் அருகே மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது, கோபால் தாஸ் என்ற உதவி காவல் ஆய்வாளர் தனது ரிவால்வரை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தினார்.

அதில் படுகாயமடைந்த நபா கிசோர் தாஸ் ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மந்திரி நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பிற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியுள்ளது. இதில், இதயம் மற்றும் நுரையீரலில் காயம் ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதய துடிப்பை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் மனநிலை சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி தாஸ் கூறும்போது, ‘‘என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த வழக்கை நான் செய்தியில் தான் கேட்டேன். எனக்கு எப்படி தெரியும்? நான் வீட்டில் இருக்கிறேன். இன்று காலை அவர் எங்கள் மகளிடம் வீடியோ அழைப்பில் பேசியதிலிருந்து நான் அவருடன் பேசவில்லை.

திரிபுரா தேர்தலில் 55 இடங்களில் போட்டியிடும் பாஜக.!

அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருந்தை உட்கொண்ட பிறகு அவர் சாதாரணமாக நடந்து கொள்வார். அவர் கடைசியாக ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தார்’’ என அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.