காங்கிரஸ் தான் பாஜகவின் பி டீம்; திரிபுராவில் மம்தா கர்ஜனை.!

கம்யூனிஸ்ட்களின் கோட்டை என கருதப்பட்ட திரிபுராவில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று பாஜக வெற்றிக் கொடி ஏற்றியது. சுமார் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாஜக, வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது.

தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. இந்தநிலையில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகல் இருக்கின்றன. இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே இருமுனை போட்டியாக பாஜக, காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆகியோர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது கட்சியாக திப்ரா மோதா (TIPRA Motha) உத்வேகம் காட்டி கொண்டிருக்கிறது. இது திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தெப்பர்மா தொடங்கிய அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது.

திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) உடன் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பாஜக அந்த கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் திரிபுராவில் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என தெரிவித்துள்ளார்.

அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும்போது, ‘‘காங்கிரஸ் கட்சியுடன் நான் ஒருமுறை தொடர்பு கொண்டவில்லை. அப்படி இருந்திருந்தால் நான் அந்தக் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டேன். இந்த காங்கிரஸ் தான் பாஜகவின் பி டீம். வங்காளத்தில் வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். உடல்நலக் காப்பீட்டுக்காக ‘ஸ்வஸ்த்ய சதி’ அட்டைகளை வழங்குகிறோம். மத்திய அரசு வழங்கிய ஆயுஷ்மான் பாரத் அட்டையில் நம்பகத்தன்மை இல்லை. பெங்கால் மாடல் சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது.

இரட்டை இயந்திர ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? உங்கள் கணக்கில் 15 லட்சம் வந்துள்ளதா?. பாஜகவால் அரசியல் ரீதியாக போராட முடியாது, அதனால்தான் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு அனுப்புகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதா? இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும், பாரத ஸ்டேட் வங்கியும் மூழ்கினால், மக்களின் பணம் திரும்பக் கிடைக்குமா? ED, CBI ஆகியவற்றின் உதவியால் நாங்கள் அழிந்துவிடுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது எளிதானது அல்ல.

பிரதமர் மோடியின் புது ப்ளூ ஜாக்கெட்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

100 நாள் வேலைக்கான பணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசின் வரியை மத்திய அரசும் வசூல் செய்து வருகிறது. எஙகள் மாநிலத்தில் கல்வித்துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். ஆனால் சில தவறுகள் இருக்கலாம், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்துள்ளதா?” என்று மேற்கு வங்க முதல்வர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.