‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி – 'லவ் யு' சொன்ன தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'விடுதலை' படத்தின் முதல் சிங்கிளான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று யு டியுபில் வெளியானது.

தனுஷ், அனன்யா பட் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். சுகா எழுதியுள்ள இந்தப் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். யு டியுபில் 15 லட்சம் பார்வைகளை இந்தப் பாடல் கடந்துள்ளது.

இளையராஜா இசையில் தனக்கு நடக்கக் கிடைத்த வாய்ப்பு, எனது அப்பா, அம்மா செய்த புண்ணியம், வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என நேற்று சூரி குறிப்பிட்டிருந்தார். அதே போல, பாடலைப் பாடியுள்ள தனுஷக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். “சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார் க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூரியின் இந்தப் பதிவுக்கு 'லவ் யு' என பதிலளித்துள்ளார் தனுஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.