சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க பாகிஸ்தான் முடிவு..!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார்.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள பாகிஸ்தானிடம் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே அந்நிய செலவானி உள்ளதாகவும், இத்தொகை அவர்களின் 16 நாள் இறக்குமதிக்கே செலவாகி விடும் என்றும் கூறப்படுகிறது.

கடனுக்கான நிபந்தனையை ஏற்றதால், பாகிஸ்தானுக்கு முதற்கட்டமாக சுமார் 120 கோடி அமெரிக்க டாலர் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சாமானியர்களுக்கு நேரடியாக சுமை இல்லாத வகையில் வரி விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.