Twitter Blue கணக்கு இல்லாதவர்கள் மார்ச் 20க்கு பிறகு இழக்கப்போகும் முக்கிய பாதுகாப்பு வசதி!

உலகளவில் முக்கிய சமூகவலைத்தளமாக இருப்பது ட்விட்டர் சமூகவலைத்தளம். வலைத்தளத்தை
எலன் மஸ்க்
வாங்கிவிட்டார். அதன் பிறகு அதன் முக்கிய பலவற்றை பயன்படுத்தவேண்டும் என்றால் மாத சந்தா
Twitter Blue கணக்கிற்கு
மாறவேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இது ட்விட்டர் பயனர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டர் கணக்குகளை விட்டு வெளியேறியும் சென்றனர். ஆனால் எலன் மஸ்க் முடிவை மாற்றிக்கொள்ளவேயில்லை. தற்போது அடுத்த இடியாக சமூகவலைத்தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கும் 2 Factor Authentication வசதியை இனி Twitter Blue அல்லாதவர்கள் பயன்படுத்தமுடியாது என்று அறிவித்துள்ளார்.

இந்த Two Factor Authentication என்பது நாம் நமது கணக்கிற்குள் வேறு எதாவது பதிவு செய்யப்படாத கருவியில் இருந்து சென்றால் முதலில் நாம் SMS Verification செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ட்விட்டர் கணக்கிற்குள் செல்லமுடியும்.

இப்போது இந்த மிக முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை ட்விட்டர் ப்ளூ பயனர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் வரும் மார்ச் 20,2023 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

நாம் ட்விட்டர் ப்ளூ பயன்படுத்தவில்லை என்றால் உடனடியாக இந்த Text two factor authentication பாதுகாப்பை நீக்கவேண்டும். இதை நாம் மார்ச் 20, 2023 க்குள் செய்யாவிட்டால் நமது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். இல்லை என்றால் பணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ பயனராக மாறிவிடலாம்.

Twitter Blue நாம் பயன்டுத்தவேண்டும் என்றால் மாதம் 900 ரூபாய் செலுத்தவேண்டும். இதை செலுத்தினால் நமக்கு ப்ளூ டிக் கிடைக்கும். மேலும் இதில் குறிப்பிட்ட சில வசதிகளாக இருக்கக்கூடிய ட்வீட் எடிட் செய்யும் வசதி, நீளமான வீடியோ பதிவிடும் வசதி, பாதுகாப்பு முன்னுரிமை, பூஸ்ட் ட்வீட் வசதி போன்ற பல வசதிகள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.