Indian 2: பரிதாபமாக பறிபோன உயிர்கள்..சென்டிமெண்ட் பார்த்து ஷூட்டிங்கை கேன்சல் செய்த ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகின்றார். 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

பின்பு காதலன் ,இந்தியன் ,ஜீன்ஸ் ,முதல்வன் என மெகாஹிட் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக முன்னேறினார். பின்பு சிவாஜி, எந்திரன், அந்நியன் ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராக உருவெடுத்தார் ஷங்கர்.

Mohan G: பகாசூரன் படத்திற்காக மோகன் ஜி வாங்கிய சம்பளம்..எவ்வளவு தெரியுமா ?

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு
கமல்
மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்டது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் மற்றும் கமல் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கினர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து நேரிட்டு மூன்று கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரிக்க படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. அதன் பின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை போன்ற பல காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் முயற்சியினால் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து
உதயநிதி
தயாரித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பை ஷங்கர் கேன்சல் செய்துவிட்டாராம். ஏனென்றால் பிப்ரவரி 19 2020 ஆம் ஆண்டு தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தார்கள்.

அதே நாளான பிப்ரவரி 19 ஆம் தேதியன்று படப்பிடிப்பை நடத்தவிரும்பாத ஷங்கர் சென்டிமெண்ட் பார்த்து ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளாராம். அந்த இடைவேளையில் கமல் அரசியல் பிரச்சாரத்திற்காக ஈரோடு புறப்பட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.