தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியின் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படுகில் பயணம் செய்து பார்வையிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ஒப்புக் காற்றின் காரணமாக சேதம் அடைவதை தடுக்க நான்காண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட வரும் மார்ச் 6 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.