Naga Shaurya:நடுரோட்டில் காதலியை அடித்த வாலிபர்: தட்டிக் கேட்டு மன்னிப்பு கேட்கச் சொன்ன இளம் ஹீரோ

Phalana Abbayi Phalana Ammayi படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இந்நிலையில் அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் செய்த விஷயம் ஒன்று வைரலாகிவிட்டது தான்.

ஹைதராபாத்தின் பிசியான சாலைகளில் ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்திருக்கிறார். இதை பார்த்த நாக சவுர்யா ஓடி வந்து அதை தடுத்தார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார். ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்தார்.

காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். மேலும் அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.

யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ. எத்தனை பிரபலங்கள் இப்படி செய்வார்கள். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் நாக சவுர்யா. உங்கள் அம்மா நல்லபடியாக வளர்த்திருக்கிறார்.

பல காலம் கழித்து ஒரு நல்ல மனிதரை பார்க்கிறோம். ஒரு நடிகர் பொது இடத்தில் இப்படி நியாயம் கேட்பது நல்ல விஷயம். அதே சமயம் ஜாக்கிரதையாக இருங்கள் நாக சவுர்யா.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒரு முறை நானும் இப்படித் தான் ஒரு பெண்ணுக்கு உதவி செய்கிறேன் என்று நியாயம் கேட்க அவர் எனக்கு எதிராக திரும்பிவிட்டதால் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. பெண்கள் மனதை புரிந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.

நாக சவுர்யாவின் Phalana Abbayi Phalana Ammayi படம் மார்ச் 17ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கும் அந்த படத்தில் மாளவிகா நாயர் நடித்துள்ளார். படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள். ஒரு மனுஷன் நல்லது செய்தால் கூட அது பப்ளிசிட்டிக்காக என்று பேசுவது எல்லாம் ரொம்ப தப்பு என நாக சவுர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார் நாக சவுர்யா. அவருக்கு கடும் காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மயங்கி விழுந்தார். எஸ்.எஸ். அருணாச்சலத்தின் படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் மயங்கி விழந்தார் என கூறப்பட்டது.

Bayilvan Ranganathan: சத்தியமா அந்த நடிகரை விக் இல்லாம பார்த்தால் அடையாளமே தெரியாது: பயில்வான்

நாக சவுர்யாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான அனுஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.