ஈரானில் இருந்து கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள்.. குஜராத் அருகே பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படையினர்..!

ஈரானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை, குஜராத் அருகே இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், குஜராத் அருகே அரபிக் கடலில் இந்திய கடலோர காவல்படையினரும், குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி வந்த ஈரானியப் படகை மடக்கி சோதனையிட்டதில் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படகில் இருந்த 5 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.