ரூ.1 லட்சம் கொடுத்தால் 3 லட்சம் கள்ளநோட்டுகள் தருவதாகக் கூறி கள்ள நோட்டுகளை பரவ விட முயற்சித்த 3 பேர் கைது..!

கோயம்புத்தூரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 3 லட்சம் கள்ள நோட்டு தருவதாகக் கூறி கள்ள நோட்டுகளை பரவ விட முயற்சித்த 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

உக்கடம் பைபாஸ் சாலையை சேர்ந்த முகமது அனிபா, தனது நண்பர் மாசிலாமணியுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை அருகே பேசிக்கொண்டிருந்த போது இரண்டு கார்களில் இறங்கிய டிப்டாப் ஆசாமிகள் 3 பேர் அவர்களிடம் கள்ள நோட்டுகள் இருப்பது போன்ற வீடியோக்களை காண்பித்தும், அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.

முகமது அனிபா இதோ பணம் எடுத்துவருவதாகக் கூறி, அங்கிருந்து புறப்பட்டு, பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் 3 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.