7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ ஹைக் பற்றிய மாஸ் செய்தி, இன்று வருகிறதா அறிவிப்பு?

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. மத்திய அரசு (மோடி அரசு) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்.

அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். ஊதியத்தில் நேரடியாக சுமார் ரூ.27,000 உயர்வு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சகம் இது குறித்த அரசாணையை வெளியிடும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். 

பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைவார்கள்

மத்திய அமச்சரவை கூட்டம் இன்று அதாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன் பிறகுதான் ஊழியர்களின் ஊதியம் உயரும். இப்போது வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள்.

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

முதல் அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டம் வெள்ளிக்கிழமை, அதாவது இன்று நடைபெறும். அதில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இதற்குப் பிறகுதான் நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிடும். அறிவிப்பு வெளியான பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. 

சம்பளம் ரூ.27,000 அதிகரிக்கும்

– ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.720 அதிகரிக்கும்.

– அதாவது ஆண்டு அடிப்படையில், ஊழியர்களின் சம்பளம் ரூ.8,640 அதிகரிக்கும். 

– மறுபுறம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 56,900 என்றால், அவர்களின் சம்பளம் மாதம் ரூ. 2276 அதிகரிக்கும்.

– அதாவது ஆண்டு அடிப்படையில் சம்பளம் ரூ. 27,312 வரை உயரும். 

சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் அரசு சார்பில் வெளியிடப்படும். 

தற்போது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உள்ளது. உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 42 சதவீதம் என்ற விகிதத்தில் வரும். ஜூலை 2022 இல், அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏன் உயர்த்தப்படுகிறது?

விலைவாசி உயர்வை ஈடுகட்டவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பதை மத்திய அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அகவிலைப்படியானது வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இந்த திருத்தம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்கள் முதல் அமலுக்கு வருகின்றன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.