வேலுமணி திடீர் மீட்டிங் ஏன்? ஏப்ரல் 14 சம்பவம் கன்ஃபார்ம் தான்… கறாரா சொன்ன அண்ணாமலை!

சென்னையில் இலக்கிய திருவிழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எங்கள் கூட்டணியில் இல்லை என ஒருபோதும் நான் கூறவில்லை. கட்சியின் மாநிலத் தலைவராக சில கருத்துகளை எடுத்து வைத்தேன். தொண்டர்களின் விருப்பதை முன்வைத்திருந்தேன். ஆனால் நாடாளுமன்ற போர்டு, தேசிய தலைமை என்ன முடிவெடுக்கிறதோ?

நேர்மையான அரசியல்

அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். கட்சிக்காக நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு கட்சி அடிப்படையில் வலுவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதன்பிறகு கட்சி தலைமை எந்த கூட்டணி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படியே நாங்கள் செயல்படுவோம்.

வேலுமணி சந்திப்பு

2024 மக்களவை தேர்தல் வியூகத்தை தற்போதே முடிவு செய்ய முடியாது எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் – எஸ்.பி.வேலுமணி சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினேன். எஸ்.பி.வேலுமணி மதுரை செல்வதற்காக விமானம் நிலையம் வந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி செல்வதற்காக வந்திருந்தார்.

ரஃபேல் வாட் ரசீது

இதனால் மூன்று பேரும் சந்தித்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இதில் அரசியலோ, வேறு விஷயங்களோ கிடையாது என்றார். ரஃபேல் வாட்ச் ரசீது குறித்து கேட்கையில், ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஆகியவற்றை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்திருந்தேன். ஏப்ரல் ஒன்றாம் தேதி அல்ல.

பிரதமர் மோடி வருகை

எனவே அன்றைய தினம் முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன். ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி பிற்பகலுக்கு பின்னர் சென்னை வருகிறார்கள். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த திட்டத்திற்காக 2,600 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவு செய்துள்ளது.

ஆருத்ரா மோசடி

அதே நாளில் மயிலாப்பூரில் உள்ள ராம கிருஷ்ணா மிஷனிற்கு செல்கிறார். சென்னை – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை தொடங்கி வைக்கிறார். இன்னும் பல திட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். ஆருத்ரா மோசடி நபர் பாஜகவில் இருப்பது பற்றி கேட்கையில், அரசியல்வாதியாக இருக்கும் போது நாம் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சினை மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது.

கட்சியில் இருந்து நீக்கம்

அப்படித்தான் என்னுடன் அந்த நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆருத்ரா மோசடியில் சம்பந்தப்பட்ட அவர் முன்னதாக காஞ்சிபுரத்தில் பாஜகவில் இணைகிறார். அவருக்கு விளையாட்டு பிரிவில் ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவில் அண்ணாமலை உடன் ஆருத்ரா மோசடியில் தொடர்புடைய நபர் என செய்தி வெளியிடுகின்றனர். உடனே அந்த நபரை பற்றி விசாரித்தேன்.

அவருக்கு மோசடியில் தொடர்பு இருந்தால் அரசியல் கட்சியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என அறிவுறுத்தினேன். உடனே சம்பந்தப்பட்ட தலைவர்கள் நோட்டீஸ் கொடுத்து கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக விளக்கம் கொடுத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.