மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து வெளியேறிய அர்ச்சனா

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான அர்ச்சனா 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலமாக மோசமான திரைக்கதையுடன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து விலகுவதாக அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியேறிவிட்டார். சீரியலின் கதை போக்கும், கதாபாத்திரத்தின் நகர்வும் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட அதிருப்தியினால் கொஞ்ச நாளாகவே சீரியலில் இருந்து தன்னை நீக்கிவிடுமாறும் அர்ச்சனா கூறி வந்தாராம். ஆனால், சீரியல் குழு பல காரணங்களை அர்ச்சனா வெளியேறவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமா? என்று யோசித்த அர்ச்சனா சீரியலிலிருந்து வெளியேறுவது தான் நல்லது என சீரியலிலிருந்து வெளியேறிவிட்டாராம். தற்போது அர்ச்சனா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.