உத்தர் தினஜ்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு.. போலீசாருக்கும், பொதுமக்கள் இடையே மோதல்..!

மேற்குவங்க மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 17 வயது சிறுமி கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கலியாகஞ் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக சிறுமியின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.

சிறுமியின் மரணத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், சாலையை மறித்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக கூறிய போலீசார், முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறி இல்லை என தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.