ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை தொடர்பான வழக்குகளை தேசிய புலானய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவு!

மேற்குவங்க மாநிலத்தில் ராமநவமியன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை தேசிய புலானய்வு அமைப்பு விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹவுரா மாவட்டத்தின் கஸிபாரா பகுதியில் ராமநவமி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலின் போது கடைகள், கார்கள் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.

இதேபோல், தல்கோலா மாவட்டத்திலும் மோதல் சம்பவங்கள்  நடைபெற்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.