ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
பின்னடைவில் ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 37 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் 8 போட்டிகளை விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அடுத்தப்படியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
தமிழக வீரர் விலகல்
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Goodbyes are really hard 😢
We are sure you will bounce back stronger, Washi 🧡🙌 pic.twitter.com/1FYx3Yk4y8
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023
வாஷிங்டன் சுந்தருக்கு கால் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறும் வீடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.