ஸ்டாலினிடம் புகார் கூறிய பிசி ஸ்ரீராம்… ஓடி வந்து வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு!

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக இருப்பவர் பிசி ஸ்ரீராம். இயக்குநர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் மற்றும் நெருங்கிய நண்பரான இவர் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். இந்நிலையில் ஒளிப்பதிவார் பிசி ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதோடு உங்களின் செயல்பாடு என்னாகிவிட்டது என்றும் கேள்வி எழுப்பி அதனை தமிழக முதல்வர் மற்றும் முக ஸ்டாலின் ஆகிய டிவிட்டர் ஹேண்டிலுக்கும் டேக் செய்திருந்தார். இதனை பார்த்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், இந்த பிரச்சனையை உடனடியாக கண்டறிந்து சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகர் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிளை மேம்படுத்தி வருகிறோம் என்றும் அதானால் சில இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் சார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்நிலையில் அவர் கவனித்து வந்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனித்து வருகிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறை ஒப்படைக்கப்பட்டது முதல் நாளில் இருந்தே தனி கவனம் செலுத்தி வருகிறார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அனைத்து தலைமைப் பொறியாளர்களுடன் முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.