Maamannan: மாமன்னன் வடிவேலு சிங்கம் மாதிரி இருக்கார், திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்: பிரபல இயக்குநர் பாராட்டு

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் ரிலீஸான மூன்று நாட்களில் ரூ. 16 கோடி வசூலித்திருக்கிறது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

பார்ட்னர் படம் பற்றி பேசிய ஹன்ஷிகா
நம்ம அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
நடித்திருக்கும் கடைசி படமாம்ல. மேலும் வடிவேலு ரொம்ப சீரியஸா நடிச்சிருக்காராம். அதனால் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என பலரும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மாமன்னன் படம் பார்த்த திரையுலக பிரபலங்களும் அதை சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மாமன்னனை பார்த்த இயக்குநர் வசந்தபாலனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மாமன்னன்

தமிழில் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம்.

இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார்.மனமார்ந்த வாழ்த்துகள்.

வடிவேலு அவர்களுக்கு நடிகனாக ஒரு பெரிய மடைமாற்றம். அவரே நம்பாத ஒரு மாற்று பாதை. அந்த பாதையில் சிங்கமாக நடந்து செல்கிறார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை,

காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.

பகத் பாசில் ஒடிசலான தேகத்துடன் மதயானை போன்ற தன் ஆளுமையால் கதாபாத்திரத்தை ஆள்கிறார்.

மாரியின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கல்லூரியில் பரியும் பரியின் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம்.

அது போல இந்த திரைப்படத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது.

நாற்காலி அமர

அனுமதி மறுக்கப்படுகிறவர்கள்

நாற்காலியில் அமர முயலும் கதையே

மாமன்னன்.

காலம் கொண்டாடும்

வாழ்த்துகள் மாரி செல்வராஜ்

யாருக்காகவும்

தன் தனித்துவமான பாதையை

விட்டுத் தராத

வைராக்கியத்திற்கு

பிடிவாதத்திற்கு என தெரிவித்துள்ளார்.

மாமன்னன் படம் பார்க்கும் அனைவரும் வடிவேலுவின் அபார நடிப்பை பார்த்து மிரண்டு தான் போகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நம்மை எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மனிதரா இவர். திரையில் ஒரு நொடி கூட அந்த நகைச்சவை நடிகரை காண முடியவில்லை.

Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

வடிவேலுவின் கெரியர் இனி பிக்கப் ஆகி உச்சத்தை தொடும் என்பதில் சந்தேகம் இல்லை. மாமன்னன் படம் பார்த்த நடிகை மாலா பார்வதியும் பாராட்டினார். மேலும் வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பணி செய்ய வசதியாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

Maamannan:மாமன்னனுக்காக உதய்ணாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?!: இது நயன்தாரா சம்பளத்தில் பாதி கூட இல்லையே

இருப்பினும் அவர் மீண்டும் வந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அவர்களின் விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.