வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் – 3!

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அதன் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி செயலிழந்தது.

இதனை தொடர்ந்து கடந்த கால தவறுகளில் பாடம் படித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. சந்திராயன் விண்கலத்தை இன்று பிற்பகல் விண்ணில் செலுத்த நேரம் குறிக்கப்பட்ட நிலையில் இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பதி பக்தர்களுக்கு செம ஜாக்பாட்… ரூ.2900 கோடியில் வெளியான அறிவிப்பு!

மேலும் சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, சந்திராயன் 3 பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் இந்த நிலவை நோக்கிய மூன்றாவது பயணத்தை இந்திய மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு கொண்டாடி வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டியும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திராயன் -3: சந்திர பகவான் ஸ்தலமான திங்களூரில் சிறப்பு வழிபாடு!

சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். லேண்டர் கருவி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என கூறப்படுகிறது. நிலவின் தென் துருவ பகுதியில் இந்த ரோவர் ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.