Thalaivar 170: தலைவர் 170 படத்திற்காக வித்யாசமான கண்டிஷனை போட்ட தலைவர்..புதுசா இருக்கே..!

​எதிர்பார்ப்புரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து முன்பதிவும் அமோகமாக இருந்து வருகின்றது

​லால் சலாம்ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட ரஜினி இப்படத்தில் 40 நிமிடங்கள் வருவார் என பேசப்பட்டு வருகின்றது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி இப்படத்தின் மூலம் மீண்டும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது

​தலைவர் 170ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இதையடுத்து தலைவர் 170 திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ரஜினியின் வழக்கமான படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் ஒரு மாறுபட்ட வித்யாசமான படமாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. தற்போது இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நானி ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக தெரிகின்றது

​கண்டிஷன்இந்நிலையில் தலைவர் 170 படத்தில் படக்குழு முழுக்க முழுக்க கூத்துப்பட்டறை நடிகர்களை மட்டுமே நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்களாம். முக்கியமான ரோலில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள் உட்பட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை அனைவரையும் கூத்துப்பட்டறை மூலமே தேர்ந்தெடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம். ஏனென்றால் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் அவ்வளவாக டேக் வாங்காமல் சிங்கிள் டேக்கில் நடித்து கொடுப்பார்கள். எனவே தான் அவர்களை தலைவர் 170 படத்தில் நடிக்க வைக்க இருக்கின்றார்கள் படக்குழுவினர். மேலும் இதற்கு ரஜினியின் வயதும் ஒரு காரணமாம். ரஜினியுடன் நடிக்கும் ஜூனியர் நடிகர்கள் அதிகளவில் டேக் எடுத்தால் அது ரஜினிக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.