Jailer: ஜெயிலருக்கு கிடைத்து வரும் பிரம்மாண்ட வரவேற்பு: நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பிய ரஜினி.!

கடந்த வியாழக்கிழமை ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் படம் ‘ஜெயிலர்’. ‘பேட்ட’ படத்திற்கு பிறகு ஒரு முழு சூப்பர் ஸ்டார் படமாக ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் படத்திற்கு சிறப்பான தரமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ‘ஜெயிலர்’ படக்குழுவினர் சந்தோஷத்தில் திக்குமுக்காடியுள்ளனர்.

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ஒரு முழுநீள ரஜினி படம் வெளியாகவில்லை என ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ படமும் ரசிகர்களை அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து ஒரு தரமான சம்பவம் செய்துள்ளார். மேலும் ‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு மத்தியில் தற்போது ‘ஜெயிலர்’ மூலமாக மாஸான கம்பேக் கொடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் ‘ஜெயிலர்’ படத்திற்கு மிகபெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. பல இடங்களில் ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகள் படைத்து வருகிறது இந்தப்படம். தமிழ்நாட்டில் முதல் நாள் அதிகாலை காட்சிகள் இல்லையென்றாலும், படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்கள் முதல் நாள் அதிக வசூல் குவித்த படமாக சாதனை படைத்துள்ளது ‘ஜெயிலர்’

படத்திற்கு வேறலெவலில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நடிகர் ரஜினி தற்போது இமயமலை சென்றுள்ளார். படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார் ரஜினி. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், ‘ஜெயிலர்’ படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகுந்த சந்தோஷத்த்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Jailer: ‘வாரிசு’ படத்தின் மொத்த வசூலையும் ஒரே நாளில் முந்திய ‘ஜெயிலர்’: தட்டி தூக்கிய தலைவர்.!

அத்துடன் படம் வெளியான நாளில் இருந்து நேற்றும், இன்றும் ரஜினி தனக்கு மெசேஜ் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் பாக்ஸ் ஆபிஸில் இங்க நான் தான் கிங் என நிரூபித்துள்ளார் ரஜினி. மேலும், அண்ணாத்தவிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது ‘ஜெயிலர்’.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு நிகராக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருவருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் அனிருத் இசை, ஹுக்கும் பாடலும் ரசிகர்களை திரையரங்கில் ஆட்டம் போட வைத்துள்ளது. ‘ஜெயிலர்’ படத்தினை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj: நாங்குநேரி கொடூர சம்பவம்: ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் விளாசல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.