சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துமவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை […]