Ameer:"அமீர் அண்ணன் சொல்வது உண்மைதான்"- ஆதரவு தெரிவித்த சசிகுமார்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

 ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில்  இயக்குநர் அமீர் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள்.

அமீர்

இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே” என்று அமீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.  அந்தப் பதிவில், “ அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

 ‘பருத்திவீரன்’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என்று குறிபிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.