சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் : கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் இணக்கம்… – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் நாடு பெற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகது;துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 12ஆம் திகதி நடத்தினால், நாடு இரண்டாவது கடன் தவணையை 12ஆம் திகதியே பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார்.

இரண்டாம் தவணை நாட்டிற்கு கிடைக்காது என்றும், கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் இணங்காது என்றும் கடந்த 2 மாதங்களில் கருத்து வெளியிட்டிருந்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், இரண்டாவது தவணை நிச்சயம் இலங்கைக்கு கிடைக்கும்; எனவும் மேற்படி கருத்து முற்றாக அழிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.