140 private universities in 5 years, 28 in Gujarat and 4 in Tamil Nadu | 5 ஆண்டுகளில் 140 தனியார் பல்கலைகழகங்கள்:மத்திய கல்வியியல் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 140 தனியார் பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய கல்வியியல் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவித்து இருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 140 தனியார் பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 28 பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் 15, ம.பி.,யில் 14, கர்நாடகாவில் 10 பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது.

சட்டீஸ்கரில் ஏழு. ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தலா ஆறு, பீகார், ஒடிசா, உத்தரகண்ட், தெலங்கானாவில் தலா 5, ஆந்திரா, ஹரியானா, மணிப்பூர், தமிழ்நாடு,சிக்கிம், மற்றும் உ.பி.யில் தலா நான்கு பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டு உள்ளது.

அதிகப்டசமாக 2018-19-ம் ஆண்டுகளில் மட்டும் 40 தனியார் பல்கலைகழகங்களும், 2021-22-ல் 34 பல்கலைகழகங்களும் நிறுவப்பட்டுள்ளன என மத்திய கல்வித்துறையின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.