Blast in smelter kills 13; 38 people were injured | உருக்காலையில் வெடி விபத்து 13 பேர் பலி; 38 பேர் படுகாயம்

பாலு: இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் சீன நிறுவனத்துக்கு சொந்தமான உருக்காலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலியாகினர்; 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் மோரவாலியில் உள்ள தொழிற்பேட்டையில், நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உருக்காலை இயங்கி வருகிறது.

இங்கு, மின்சார வாகன பேட்டரிகளை தயாரிக்க பயன்படும், ‘நிக்கல்’ உலோகம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் உள்ள உருக்காலை இயந்திரத்தை பழுது பார்க்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, அதில் படிந்திருந்த திரவப்பொருள், திடீரென வெடித்து சிதறியதுடன் அருகில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் பட்டு தீ விபத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் ஐந்து சீனர்களும், எட்டு இந்தோனேஷியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், நான்கு மணி நேரம் போராடி, உள்ளே சிக்கி இருந்த 38 தொழிலாளர்களை மீட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.