அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திணித் சிந்தாக கருணாரத்னவின் தலைமையில் அனைத்து திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களும் ஒன்றுகூடியதுடன் அங்கு பணிப்பாளர் நாயகத்தினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு, அரச சேவை சாத்தியப்பிரமாணத்தையும் வாசித்தனர்.
சவால்களை வெற்றி கொள்வதற்கும், சந்தோசமாகவும், ஒத்துழைப்புடனும், வினைத்திறனாக செயற்பட உதவும் புதுவருடமாகட்டும் என அவர் சகல உத்தியோகத்தர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் திணைக்களத்தின் ஒவ்வொரு அதிகாரியும் அலுவலக கடமைகளை மேற்கொள்ளும்போது தமக்கு அதிக ஆதரவை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.