இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டியை இலவசமாக கண்டுகளிக்க வாய்ப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை இலங்கை விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி நாளை (11) போட்டி நடைபெறும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் C & D மேல் மற்றும் கீழ் பார்வையாளர் மண்டபங்களில் இருந்து (“C & D Upper and Lower Stands”) பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக உட்பிரவேசிக்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம்; அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பகல்ஃஇரவு போட்டியாக நடைபெறவுள்ள நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த இறுதிப் போட்டியின் வெற்றி இலங்கை அணிக்கு போட்டித் தொடரை வெல்வதற்கு முக்கியமானதாக அமையும்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.