'பஞ்சாப்பில் 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்' – பகவந்த் மான் நம்பிக்கை

சண்டிகர்,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நேரடியாக பதிலளிக்காத பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார். பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை 92 இடங்களில் மக்கள் வெற்றி பெறச் செய்தனர் என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.