Iraq executes 13 prisoners suddenly | ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டெஹரான்: ஈராக்கில் பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறை கைதிகளுக்கு திடீரென ‛ ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈராக்கின் தெற்கு மாகாணமானத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் கடந்த 24-ம் தேதி ஒலிபெருக்கியில் 13 தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக சிறை நிர்வாகம் திடீரென அறிவித்தது. அதன்படி மறுநாள் 25-ம் தேதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

முன்னதாக கொடுங் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பின்னரே நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்த ஈராக் அரசு திடீரென 13 சிறைகைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.