இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாவலராக கடமையாற்றி விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபாவை வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்; சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.