சென்னை: ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் இயந்திரங்கள் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பனை மேம்பாடு இயக்கத்துக்கு நிதி மற்றும் நம்மாழ்வார் விருதுக்கு நிதி என பல்வேறு நிதிகளை ஒதுக்கீடு செய்து தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேரவையில் அவர் பேசியதாவது: ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் […]
