பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் : திருப்பதி பல்கலைக்கழகம் வழங்கியது

வடஇந்தியாவுக்கு லதா மங்கேஷ்கர் என்றால் தென்னிந்தியாவுக்கு பி.சுசீலா. இசைகுயில் என்றும், மெல்லிசை அரசி என்றும் போற்றப்படுகிறவர். இந்திய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர். 5 தேசிய விருதுகளையும், 12 மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். ஏற்கெனவே அவருக்கு பல பல்கலை கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

இந்த நிலையில் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசிர் பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.