2025 ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையை முதல் முறையாக கைபற்றியது. இது அவர்களின் 18 ஆண்டு கனவு. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை சேர்த்து இதுவரை 4 முறை ஆர்சிபி அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் இந்த முறை தான் அவர்களால் கோப்பையை வெல்ல முடிந்தது.
18 ஆண்டுகால ஐபிஎல் கோப்பை வறட்சியை போக்கிய ஆர்சிபி அணி இதனை விமர்சையாக கொண்டாட முடிவு செய்தது. இறுதி போட்டியின் கடைசி ஓவர் முதலே ஆர்சிபி அணி ரசிகர்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். பெங்களூரு மட்டுமல்லாமல் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
இச்சூழலில் கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே பெங்களூரில் விமர்சையாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்து அறிவித்தது. பெங்களூருல் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேரணி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இருப்பினும் ஆர்சிபி அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பேரணி நடத்துவதாக அறிவித்தது.
இதனால் பல லட்சம் ரசிகர்கள் கூடினர். கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது. ஆர்சிபி அணி நிர்வாகம் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி நிர்வாகத்தை பெங்களூரு காவல்துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
பேரணி நடத்த காவல்துறை மறுத்த நிலையிலும் ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. நேற்று மதியம் 3 மணி அளவில் ஆர்சிபி அணி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறது. வெற்றி பேரணி விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை மாலை 5 மணிக்கு நடைபெறும். இதனை தொடர்ந்து மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பாஸ்கான லிங்க் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் மட்டும்தான் அனுமதி என்றும் காவல்துறை அறிவுத்தல் படி நடந்து கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் தான் காவல்துறை அனுமதி மறுத்த பிறகும் ஏன் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியானது என்றும் பெங்களுரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 3 ஆம் தேதி இரவே விதான் சவுதாவில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டதாக ஆர்சிபி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் தங்களுக்கு கடைசி நேரத்தில் தான் நிகழ்ச்சி குறித்து தெரியும் என கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.
அதேசமயம் விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதான என ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகள் என்றால் பாதுகாப்பு கொடுப்பதில் பிரச்சணை எற்படும் என பெங்களூரு போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் அதையும் மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிகழ்ச்சி நடத்த இரண்டு நாட்கள் இடைவெளி இருந்திருந்தால், நல்ல முறையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிங்க: இன்று தொடங்குகிறது TNPL.. 8 அணி வீரர்களின் விவரம்.. எந்த சேனலில் பார்க்கலாம்?
மேலும் படிங்க: லக்னோ அணியில் இருந்து ஜாகீர் கான் நீக்கம்? ரிஷப் பண்ட் கேப்டன் இல்லை? சஞ்சீவ் கோயங்கா அதிரடி!