டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து காசியாபாத் போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியை நாட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்-மந்திரிக்க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.