சென்னையில் 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நாளையும் (9-ம் தேதி), வரும் 12-ம் தேதிகளில் காலை 10.30, 11.35 மணி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணி, இரவு 9 மணிக்கு மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் காலை 9.40, நண்பகல் 12.40, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 3.50 மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடிக்கு இரவு 11.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் மதியம் 1, பிற்பகல் 2.40, 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையேயும் பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, அதே நாளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.