சென்னை விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. லட்சம் நிதி உதவி வழங்க் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில். “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (07.06.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) தபெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
