சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவரை அரசு பணியிடை நீக்கம் செய்து உள்ளது. தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு […]
