விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து அகம​தா​பாத் சிவில் மருத்​து​வ​மனை​யின் கூடு​தல் மருத்​துவ கண்​காணிப்​பாளர் டாக்​டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார்.

இந்த விமான விபத்​தில் உயி​ரிழந்த குஜ​ராத் முன்​னாள் முதல்​வர் விஜய் ரூபானி​யின் உடல் அடை​யாளம் காணப்​பட்​டது. இதையடுத்​து, அவரது உடல் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவரது உடல் ராஜ்கோட்​டில் முழு அரசு மரி​யாதை​யுடன் நேற்று மாலை தகனம் செய்​யப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.